தொல்லியல் முக்கியத்துவமிக்க இடங்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள தொல்பொருள்

திணைக்களம், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் முப்படையினரின் ஆதரவுடன் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தொல்பொருள் இடங்களுக்கு சேதம் விளைவிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், குறித்த பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் இவர்களின் உதவி கோரப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்