இன்று (8) காலையில் பத்தரமுல்ல பொல்துவ சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த 31 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறுகிறார்.

ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ள போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதற்காக இரு பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.

இன்று கைது செய்யப்பட்டவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் ரத்கரவ்வே ஜினரதன தேரர், மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோரும் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் ‘இலவச கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கம்” இந்த இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி