இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 3 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்.
இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.