உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சங்கு – சைக்கிள் கூட்டணி தரப்பின் சார்பில்
தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு மீண்டும் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கொள்கை ரீதியான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் அந்தப் புதிய கூட்டின் முக்கியஸ்தர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெறவிருந்த நிலையில் அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டு இன்று நடைபெறவிருந்தது.
இந்நிலையில் குறித்த சந்திப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இன்று கூட்டாகத் தெரிவித்தனர்.
இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி இன்று மாலை இடம்பெறும் சென்று சி.வி.கே.சிவஞானம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.
-மாலைமுரசு