தாய்லாந்தின் - பட்டாயாவில் சனிக்கிழமை இரவு இலங்கை சுற்றுலாப் பயணி ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் சேவை தொடர்பாக இருவருக்கும் இடையே நடந்த ஒரு பிரச்சினை காரணமாகக் கோபமடைந்த 29 வயது திருநங்கைப் பெண், தான் அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் செருப்பால் அவரது தலையில் பலமுறை தாக்கியதில் 54 வயது இலங்கையர் காயமடைந்துள்ளார்.

மேற்படி தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர், அந்தப் பெண்ணிடம் பாலியல் சேவைகளுக்கான கட்டணம் தொடர்பில் வினவிய பின்னர், அவர் உண்மையிலேயே ஒரு பெண்ணா என்பதை அறிய விரும்புவதாகவும், தனக்கு அது பற்றி சந்தேகம் இருப்பதாகவும் கூறி, திருநங்கையின் பாலினத்தை உறுதிப்படுத்த இரண்டு முறை தவறாகத் தொட்டதாக, பொலிஸாரிடம் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு முறை தன்னைத் தொட்ட பிறகு, தனது பாலியல் தன்மையைப் பற்றி தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை என்று கூறி மீண்டும் தன்னைத் தொட முயன்றதாகவும், தனக்கு எதுவும் பணம் கொடுக்காமல் மீண்டும் இப்படிச் செய்ததால் தான் கோபமடைந்ததாகவும், அதனால் அவரைத் தாக்கியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இலங்கையரின் தலையில் 4 அல்லது 5 முறை பாதணிகளால் அவர் தாக்கியுள்ளார் என்று அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்ததாக, தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-அருண

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி