கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான
பஸ் ஒன்று, இன்று காலை 8.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வட்டவளை – தியகல, நோட்டன் பிரிஜ் ஊடாக மஸ்கெலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இந்த பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்த பஸ், சாலையின் இடதுபுறத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது.
மிகவும் ஆழமான பகுதியில் பஸ் சரிந்துள்ளதாகவும் இதன்போது அந்த பஸ்ஸில், சுமார் 20 பேர் பயணித்துள்ளதாகவும் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் விபத்து காரணமாக, அந்த வீதியினூடான கனரக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.