ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் அமைச்சரவைக்கு

அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி