சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கலை விடுதலை செய்யவேண்டும் என சிறைச்சாலைகள் உயர்அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக சங்கம் கூறியுள்ளது.

தற்பொழுது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் எண்ணிகையை விட அதிகமானோரை தடுத்து வைத்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சேனக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அனுராதபுர சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது எனவே இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு சிறைகளில் இருக்கும் சிறு குற்றம் செய்தவர்களை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலைகள் உயர் அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி