ரத்ன தேரருடன் ஒரு குழுவினர் அபே ஜன பல கட்சியில் எதிர்வரும்  பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அனைத்து மாவட்டங்களிலும் தங்களது கட்சியினூடாக வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு மற்ற கட்சியில் இடம் கிடைக்காத நிலையில் அவரே கட்சி ஒன்றை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடத்தில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக theleader.lk க்கு தகவல் கிடைத்துள்ள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரத்ன தேரருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு  இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி