கொவிட் 19 வைரஸ் தற்போது இலங்கையிலும் பரவியுள்ளதால் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான காலத்தை நீடிப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுக்க முடியும் என்று தேர்தல் திணைக்களத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை தள்ளிப்போடுவதற்கு தீர்மானம் எடுக்க ஆலோசிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற  சட்டம் 24 ம் பிரிவின் 3 ஆம் இலக்கத்தில் குறிப்பிடப்படுவது போல் ஜனாதிபதி தேர்தலை அறிவித்த பின் ஏதாவது விசேட காரணங்களுக்காக தேர்தலைப் பிற்போடும் அதிகாரம் தேர்தல் திணைக் களத்திற்கு இருப்பதாக தேர்தல் திணைக்களத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதி தேர்தல் நடைபெறும் திகதி ஆகியவற்றையும் தள்ளிப்போட முடியும் என்று தேர்தல் திணைக்களத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி