சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியுடன் ஐ.தே.க ஒன்றுபட்டு செயற்படுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவிக்கையில் ஐ.தே.க சமகி ஜன பல வேகயவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.இதனடிப்படையில் இரு குழுக்களும் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் சமகி ஜன பலவேகய கட்சியில் போட்டியிட விருப்பதாகவும் தெரிவித்தார்.

சமகி ஜன பலவேகய கட்சியின் உறுப்பினர் கபீர் காசிம் ஐ.தே.க இத்தீர்மானம் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையில் கடந்த 04ம் திகதி ஐ.தே.க செயற்குழுவில் ஏற்பட்ட மாற்றமே இத்தீர்மானத்திற்கு காரணம் என்று தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி