சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு மறை புள்ளிகளை வழங்கும் முறை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.



பாராளுமன்றத்தில் இன்று (28) உரையாற்றும் போவேர் இதனை தெரிவித்துள்ளார்.

தரமான சாரதியை உருவாக்கும் நோக்கில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படுவதாகவும், ஆனால் இந்த முறை அங்கீகரிக்கப்பட்டு 8 வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, 32 குற்றங்களுக்கு இவ்வாறு புள்ளிகள் குறைக்கப்படும் என்றும், 24 புள்ளிகள் குறைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி