பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாமல் இருந்தால் அவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்குவது தொடர்பான சட்டமூலமொன்றை

பாராளுமன்றத்துக்கு கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இது தொடர்பில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவிக்கையில்,

சில மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி 9 முதல் 10 வருடங்கள் வரை பரீட்சைக்குத் தோற்றாமல் அரசியல் பணியை மேற்கொள்வதனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் கணக்கெடுப்பை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பல்கலைக்கழக வேந்தர்களின் உதவிகளையும் பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி