ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சிக் கூட்டம் ‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

 

இந்த கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் ஏற்பாட்டில் நாளை  புத்தளம் ஆரட்சிக்கட்டு பகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளவுள்ளனர்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மாற்றமடைந்ததன் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முதலாவது கட்சி கூட்டம் கடந்த 8 ஆம் திகதி ‘களுத்துறையில் இருந்து மீண்டும் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டம் கடந்த 16ஆம் திகதி நாவலபிட்டி நகரில் இடம்பெற்றது.

நாவலபிட்டி நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி