வீதி மறியலில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டத்திற்கு எதிராக இவர்கள் நாவலப்பிட்டிய பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
