நெல் கொள்வனவை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(21) நடைபெறவுள்ளது. 

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் அரச வங்கிகளின் உத்தியோகத்தர்களும் பங்கேற்கவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

இதனிடையே, நெல் கொள்வனவை அரசாங்கம் நிறுத்தியுள்ள காரணத்தினால் விவசாயிகள் தமது அறுவடையை விற்பனை செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி