இஸ்லாத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வையும் அவமதித்து குற்றஞ்சாட்டப்பட்ட ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலணியில் ஒரே நாடு, ஒரே சட்டம்

பொதுபல சேனாவின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக வியாழக்கிழமை (10) வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது, ​​கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகல பிக்குவை விடுவிக்க உத்தரவிட்டார்.

வழக்கு நிலுவையில் உள்ளதால் சந்தேகத்திற்குரிய பிக்குவை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரட்னத்தின் பணிப்புரைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதம நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களிலும் சட்டமா அதிபரினால் இவ்வாறான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.சுமார் 20 ஆண்டுகளாக இருக்கும் வழக்குகளை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டதற்பாக தற்போதைய சட்டமா அதிபர் மீது எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளது.

பொலன்னறுவை சின்னவெலப்பட்டி கிராமத்திலும் வெஹெரகொவெல்ல பிரதேசத்திலும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியதன் மூலம் முஸ்லிம் சமூகத்தையும், இஸ்லாத்தையும்,அல்லாஹ்வையும் இழிவுபடுத்தியதாக ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவானால் நீதிமன்றில் அண்மையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதி செயலணியின் தலைவருக்கு எதிரான முறைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைத்ததை அடுத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை கைவிட்டதையடுத்து, இளைஞர்கள் உட்பட பதினொரு பேர் கடத்தப்பட்டதோடு, காணாமல் போன வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவும் விடுதலை செய்யப்பட்டார்.

அதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொடவை நியமித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி