அதிநவீன தொழில்நுட்ப கேபிள்களில் கட்டப்பட்ட பாலம், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் தலைநகருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

திருகோணமலையில் படகு பாதை கவிழ்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவர்களுக்காக முல்லைத்தீவில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியுள்ளனர்.

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாகேணி களப்பில் செவ்வாய்க்கிழமை காலை படகு பாதை கவிழ்ந்து உயிரிழந்த  மாணவர்களின் நினைவாக முல்லைத்தீவு குளமுறிப்பு தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் நேற்று (24) காலை இறுதி அஞ்சலி செலுத்தியதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி  மலரஞ்சலி செலுத்துவதற்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கவிழ்ந்த படகு பாதையில் நடத்துனர்கள் மற்றும் உரிமையாளரை கைது செய்துள்ளதாக பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

IMG 20211124 WA0047FB IMG 1637745727018

"கல்யாணி தங்க நுழைவாயில்"

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இலங்கையின் முதலாவது அதிநவீன தொழில்நுட்ப கேபிள் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனி பாலத்தை நேற்று திறந்து வைத்தனர்.

புதிய களனி பாலத்திற்கு 'கோல்டன் கேட் கல்யாணி' என பெயரிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து பேலியகொட பாலம் சந்தி வரை ஆரம்பிக்கப்படும் புதிய களனி பாலம் திட்டம் ஒருகொடவத்தை சந்தி மற்றும் துறைமுக அணுகல் சந்தியில் நிறைவடையும்.

இந்தப் பாலமானது கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் முடிவில் இருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திற்குச் சென்று அங்கிருந்து ஒருகொடவத்தை, இகுருகடே சந்தி மற்றும் துறைமுக அணுகல் வீதிக்கு செல்லும் 6 வழிப்பாலமாகும்.

களனி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் நீளம் 380 மீற்றர்களாகும். இந்த பாலம் இரண்டு கட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) நிதியளித்தது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி