போரின்போது தமது மண்ணுக்காக, தமது இனத்துக்காக எந்த எதிர்பார்ப்பையும் கருதாது போரிட்டு உயிர்நீத்தவர்களுக்கான நிகழ்வுகளுக்கு இடம்தரவேண்டும்.

மரித்தவா்களை மதிப்பதை அரசாங்கம் தடுக்கிறது.

எனினும் குறித்த நிகழ்வுகளை நினைவுகூர அரசாங்கம் அனுமதித்தால், உயிர் நீத்தவர்களுக்கான நிகழ்வுகளை சுதந்திரமாக நிகழ்த்திவிட்டு தமது உறவுகளின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்வார்கள்.

இல்லையேல், இனரீதியான உணர்வுகளால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதேவேளை இலங்கையில் சட்டமாக இருக்கின்ற 13வது திருத்தத்தை உரியவகையில் செயற்படுத்தி இந்தியாவுடன் நல்லுறவை, இலங்கை அரசாங்கம் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என்றும் அவர் கோாிக்கை விடுத்தார்.

எனவே மாகாணசபைகளின் அதிகாரங்களை வழங்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜி.எல் பீரிஸ், மாகாணசபை தேர்தல் தாமதமாவதற்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்று குற்றம் சுமத்தினார்.

எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத செல்வம் அடைக்கலநாதன், மாகாணசபைத் தேர்தலைப் பற்றி கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியம்.

எனினும் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களைப் பற்றியே தாம், கோாிக்கை விடுப்பதாக குறிப்பிட்டார்.

இதேவேளை 2022 ஆம் ஆண்டுப் பாதீட்டில் விஹாரைகள் அமைப்பதற்கு அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் வடக்குகிழக்கில் இன்னும் விஹாரைகள் அமைக்கப்படப்போகிறதா? என்று செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி