குடி போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று ஒரு மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி, பாதையில் சென்று கொண்டிருந்த சிலரையும் விபத்தில் சிக்க வைத்துவிட்டு தப்பிச் சென்ற பிரதமரின் செயலாளரொருவரை பொலிஸார் நேற்று (10) கைது செய்துள்ளனர்.

கிடைக்கும் செய்திகளுக்கமைய இந்த நபர் அதிக மதுபோதையில் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் பாதையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி, பாதசாரிகள் சிலர் மீதும் வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

போக்குவரத்துப் பொலிஸார் வருவதற்கு முன்பே தப்பிச் செல்ல முயன்ற போதிலும் அங்கிருந்த சிலர் அவரை பிடித்து நவகமுவ பொலிஸில் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி