ஜூலை முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் 2.5 வீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தினால் இன்று (25) பஸ் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் பஸ் சங்கங்களுக்கும் இடையே இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது அறிவிக்கப்பட்டது.
ஜூலை 1ஆம் திகதி திட்டமிடப்பட்ட வருடாந்த பஸ் கட்டண திருத்தம் குறித்து கலந்துரையாடுவதற்கு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையே இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இருப்பினும், அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு பஸ் சங்கங்கள் தங்களது எதிர்ப்பை வௌியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பஸ் கட்டணம் 2 வீதத்தினால் குறைக்கப்பட்டால், முதலாவது மற்றும் இரண்டாவது குறைந்தபட்ச கட்டணங்களில் எந்த திருத்தமும் இருக்காது, அதற்கு அடுத்ததாக காணப்படும் கட்டணங்களில் மாத்திரமே திருத்தம் ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.