ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை ஒகஸ்ட் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஜூலை மாதத்தில் பஸ் கட்டண திருத்தம் செய்வது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இன்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.