தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட
தேங்காய்ப் பாலின் முதல் தொகுதி, தற்போது அனுமதி மற்றும் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான அளவில் தேங்காய் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் முதல் தேங்காய்ப் பால் தொகுதியே இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகம் அறிவித்தது.
இந்தத் தொகுதி தேங்காய்ப் பால், தேங்காய்ப் பவுடர் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், இந்தத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் பெறப்படும் என்றும், உள்ளூர் சந்தையில் தேங்காயின் விலை குறையும் என்றும் அமைச்சு எதிர்பார்க்கிறது.
மேலும், இந்தச் சோதனை நவடிக்கைக்குப் பின்னர், இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால், சம்பந்ப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு தொழிற்சாலைகளுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.