முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் மட்டக்களப்பில் உள்ள
அலுவலகத்தில் இன்று (30) பொலிஸார் விசேட சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தேடுதலில் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியன் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.