இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கு முன்னுரிமை அளிப்பதால், உள்ளூர் சீனி உற்பத்திக் கைத்தொழில்

கடுமையான சரிவை எதிர்கொள்வதாக, இலங்கைத் தனியார் சீனி உற்பத்தி நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்டில், சீனிக்கு சரியான விலை மற்றும் போதுமான சந்தை வசதி இல்லாதது ஒரு கடுமையான பிரச்சினை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

லங்கா சுகர் பிரைவேட் லிமிடெட், முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகும். இது இந்நாட்டின் மிகப்பெரிய சீனி உற்பத்தி நிறுவனமாகும். இது, 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.

நாட்டின் சீனித் தேவையில் 10 சதவீதத்தை இலங்கைத் தனியார் சீனி நிறுவனம் உற்பத்தி செய்கிறது. மற்றும் நாட்டின் எத்தனோல் உற்பத்திக்குத் தேவையான  37 சதவீதத்துக்கும் அதிகமான சீனியை வழங்குகிறது.

தற்போது, ​​நாட்டில் 4 பெரிய சீனித் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதே நேரத்தில், செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலைகளும் லங்கா சீனி நிறுவனத்தின் கீழ் நேரடியான இயக்கப்படுகின்றன.

மேலும், அதியமலை சீனித் தொழிற்சாலை, ஒரு தனியார் நிறுவனத்தின் கீழ் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஹிங்குரான சீனித் தொழிற்சாலை அரை-அரச உரிமையின் கீழ் இயக்கப்படுகிறது.

இருப்பினும், லங்கா சுகர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தற்போது மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். சீனிப் பொருட்களுக்கு நியாயமான விலை இல்லாததாலும், லங்கா சுகர் நிறுவனம் உள்ளிட்ட உள்ளூர் சீனித் தொழிற்சாலைகளில் சரியான சந்தைப் பங்கு இல்லாததாலும் இந்தப் பிரச்சினை தீவிரமடைந்து வருவதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தற்போது, ​​உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் 35,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான சீனி, களஞ்சியசாலைகளில் தேங்கிக் கிடக்கின்றனது. இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனி சந்தைக்கு வருவதும், அதன் மீதான இறக்குமதி வரிகளை நீக்குவதும் உள்ளூர் பொருட்களுக்கான தேவையைக் குறைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இத்தகைய பின்னணியில், லங்கா சுகர் நிறுவனம் மற்றும் பிற உள்ளூர் சீனித் தொழிற்சாலைகளின் ஊழியர்கள், தாங்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் மூடப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த சீனித் தொழிற்சாலைகள் அனைத்தும், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கின்றன. அவ்வாறு அந்தத் தொழிற்சாலைகள் மூடப்பட்டால், அவர்களும் மேலும் 100,000க்கும் மேற்பட்ட சார்புடையவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்வார்கள்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும் என்றும் இறக்குமதி செய்யப்படும் சீனி, முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி