இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில்,

'ஜப்பானின் பாபா வங்கா' என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் ஒரு பழைய தீர்க்கதரிசனம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

1999ஆம் ஆண்டு எழுதிய "The Future As I See It" என்ற புத்தகத்தில், 2020ல் மர்ம வைரஸ் உருவாகி, மறைந்து 2030ல் மீண்டும் மோசமாக தாக்கும் என அவர் எழுதியியுள்ளார்.

தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் 19 மீண்டும் பரவலாக இருப்பது, அவரது கணிப்பை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாவது, மீண்டும் மருத்துவ உலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ராஜீவ் பெல், தற்போதைய வைரஸ் Omicron வகையைச் சேர்ந்தது என்றும், தற்போது பரவும் வகைகள் – LF.7, XFG, JN.1, NB.1.8.1 என பல மாற்று வடிவங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில், பாபா வங்காவின் கணிப்புகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

அவர் இதற்கு முன் கோவிட் 19, இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், பாடகர் ஃபிரெடி மெர்குரியின் மரணம் போன்றவற்றையும் கணித்ததாக கூறப்படுகிறது.

மேலும், 2025 ஜூலை மாதம் ஜப்பான்–பிலிப்பைன்ஸ் இடையே கடலில் பெரும் பிளவு ஏற்பட்டு, 2011 சுனாமியை விட மூன்று மடங்கு பெரிய சுனாமி ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது ஜப்பான் தெற்கு பகுதியில் கடலுக்கு கீழ் நிலநடுக்கத்தால் ஏற்படும் என கூறப்படுகிறது. 2020ல் கோவிட் 19 வந்தது உண்மை. 2030ல் அது திரும்பும் வாய்ப்பு உள்ளதா என்ற அச்சம் தற்போது மக்களிடையே எழுந்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி