இலங்கையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பியறகு, சிக்கன்குன்யா வைரஸ் நோய் பெரியளவில்

பரவத் தொடங்கியுள்ளது என்று பேராசிரியர் நீலிகா மாலவிகே கூறுகிறார்.

'X' சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ள பேராசிரியர் மாலவிகே, மாறுபாட்டை அடையாளம் காண ஒக்ஸ்போர்டு நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி ஒரு முழுமையான மரபணு வரிசை செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.

தற்போதைய வைரஸ் இந்தியப் பெருங்கடல் பரம்பில் பல தனித்துவமான பிறழ்வுகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பேராசிரியர் சந்திமா ஜீவந்தர உள்ளிட்ட குழுவினருடன் நடத்தப்பட்ட ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி, பேராசிரியர் மாலவிகே பின்வரும் கருத்துக்களைக் கூறினார்.

"இலங்கையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து சிக்கன்குன்யாவின் பரவல் காணப்படுகிறது. தற்போது பரவி வரும் சிக்கன்குன்யா வைரஸ் (CHIKV) திரிபின் முழுமையான மரபணு வரிசையை நாங்கள் பரிசோதித்தோம். மேலும், அது தெற்காசியாவில் தற்போது பரவி வரும் சிக்கன்குன்யா வைரஸைப் போலவே இந்தியப் பெருங்கடல் பரப்பைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்தோம்

இலங்கையில் 2025 CHIKV திரிபு தனித்துவமான பிறழ்வுகளைக் காட்டுகிறது என்றும், மேலும் பிறழ்வுகள் கண்டறியப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் புதிய பிறழ்வுகளில் சில, முன்னர் வகைப்படுத்தப்படாததால் அவை நுளம்புகளின் உடற்தகுதி, வைரஸ் பிரதிபலிப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தவிர்ப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய்வது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி