1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும்

அரசியலமைப்பு விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (25) நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

இன்று (25)  காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இடம்பெற்றதுடன், வாக்குப்பதிவு திகதி தொடர்பில் உறுப்பினர்களிடையே நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தீர்மானித்திருந்த அதேவேளை, மற்றுமொரு குழுவானது செப்டம்பர் 28ஆம் திகதி சனிக்கிழமையே ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தீர்மானித்திருந்தது.
 
எனினும் இந்த விசேட கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் கலந்து கொள்ளாததால் அவரை வெளிநாட்டில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி