1200 x 80 DMirror

 
 

கொழும்பு கிராண்ட்பாஸ்

பகுதியில் கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாத்தறை பகுதியைச் சேர்ந்த கே.ரன்முத்து தர்ஷன என்ற 31 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
 
படுகாயமடைந்த 56 வயதுடைய சுனிதா என்ற பெண், உயிரிழந்த தனது மருமகனுடன் பேஸ்லைன் வீதியிலிருந்து வதுல்லவத்தை பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி