இன்று காலை 9.30 வரை கொரோனா நோய் தொற்றிய 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறுகிறார். அதன்படி இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 295க உயர்ந்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட சகல நோயாளர்களும் கொழுப்பு 12, பண்டாரநாயகபுர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களாகுமென செய்தித் திணைக்களம் கூறுகிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றியவர்களில் அநேகர் ஏற்கனவே கொரோனா தொற்றியவர்களோடு உறவாடியவர்களாகுமெனவும் திணைக்களம் கூறுகிறது.

கொழுப்பில் நோய் தொற்றியவர்களோடு நெருக்கமாகப் பழகியவர்களுக்கு நோய் தொற்றியிருப்பதுதான் ஆபத்தான விடயமென தொற்று நோய் நிபுணர் டொக்டர் சுதத் அமரவீர கூறுகிறார். அதோடு, இந்த நோய் தொற்றியவர்களின் சுற்றுச் சூழலை பார்க்கும்போது, அவர்கள் பெரும்பாலும் பயணங்கள் செல்பவர்களாகவும் மேலும் பலரோடு கலக்கும் நபர்களாகுமெனவும் அவர் கூறுகிறார்.

எனவே, மேலும் எத்தனை பேருக்கு இந்த தொற்றியுள்ளது என்பதை கூற முடியாதெனவும் டொக்டர் சுதத் அமரவீர கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி