இன்று (20) தேர்தல் ஆணையத்தில் இரண்டு சிறப்பு விவாதங்கள் நடைபெற இருகின்றன.முதல் கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக் குழுவின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று தேர்தல் ஆணைக் குழுவின்  பணிப்பாளர்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம், ராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர், தபால் மா அதிபர் , தேர்தல்களுக்குப் பொறுப்பான டி.ஐ.ஜி மற்றும் சுகாதார மற்றும் பொது நிர்வாக அமைச்சுகளின் செயலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடலில் பங்கேற்க முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவே திகதியை தீர்மாணிக்க வேண்டும் - பிரதமர்

Election Commissionors Mahinda Deshapriya and SRS Hoole

பொதுத் தேர்தல் தொடர்பாக அரசியல் அரங்கில் சூடான விவாதத்தின் பின்னணியில் இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் திணைக்களத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.

ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாவிட்டால், தேர்தல் திணைக்களம் மற்றொரு திகதியை அறிவிக்க  வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு!

தொற்றுநோய்களுக்கு மத்தியில் தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு தேர்தல் ஆணைக்குழு  உறுதுணையாக இருக்காது என்று தேர்தல் ஆணைக் குழுவின் உ றுப்பினர் ரத்னஜீவன் ஹூல் எச்சரித்துள்ளார். என்று கொழும்பு டெலிகிராப் வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், திடீர் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கும் நோக்கில், தேர்தல் ஆணைக் குழுவின்  மூன்று உறுப்பினர்களில் ஒருவர் ஏப்ரல் 20 ம் திகதி சந்திப்பொன்றை நடத்துவார் என்று anidda.lk வலைத்தளம் செய்தி வெளிட்டிருந்தது.  

எடுக்கப்பட வேண்டிய முடிவு குறித்து தேர்தல் ஆணைக்குழுவின்  உறுப்பினர்கள் முறையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், தேர்தல் திகதியை தீர்மானிப்பதற்காக ஏப்ரல் 20 ம் தேதி தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர்களிடையே நடைபெறும் கலந்துரையாடலில் அந்த உறுப்பினர் செல்வாக்கு செலுத்துவார் என்று anidda.lk வலைத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்னதாக மே மாத இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டுமானால், ராஜபக்ஷர்களின் ஒப்புதலுடன் நாடு ஏப்ரல் 20 க்குள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று கூறியிருந்தார்.

தேர்தல் ஆணைக்குழு அதன் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி