சிலர் ஈஸ்டர் தாக்குதல்கள் மூலம் மத ஒற்றுமையை அழிக்கவும் மதங்களுக்கு இடையே தேவையற்ற மோதலை உருவாக்கவும் சதி செய்தனர்

கார்டினல் மால்கம் ரஞ்சித், தங்களுக்கு எதிராக சதி செய்தவர்களை அவர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல் கண்டுபிடிப்பது முக்கியம் என்பதை மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தொடர் தாக்குதல் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், "இது தொடர்பான விசாரணை மிகவும் உண்மையாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும்  அவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுப்பது  முக்கியம்."

சட்டத்தரணிகள் நிதி மற்றும் ஆயுத ஆதரவுக்காக வழக்குத் தொடர வேண்டும்!

ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட குண்டுவீச்சாளர்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் போன்றவற்றின்  ஆதரவை வழங்கியவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று புனித பேராயர் கார்டினல் ரஞ்சித் கூறினார்.

இந்த தாக்குதல் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும், விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், கொவிட் -19 நெருக்கடியை எதிர்கொண்டு தாக்குதலின் முதல் ஆண்டு நிறைவை நினைவுகூறவில்லை என்றும் பேராயர் கார்டினல் ரஞ்சித் சுட்டிக்காட்டினார்.

"ஈஸ்டர் தாக்குதல் குறித்து தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து விசாரணை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எவ்வாறாயினும், தாக்குதலை அறிந்தவர்களையும், பொதுமக்களை எச்சரிக்கத் தவறியவர்களையும் மீண்டும் அழைத்து விசாரணை நடத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். ”

எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியவர்களை அடையாளம் கண்டு வழக்குத் தொடர வேண்டும் என்று பேராயர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் ஒருபோதும் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது, குற்றவாளியின் குறைபாடுகளை நாங்கள் சரிசெய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி