கடலில் மிதந்த போது காணப்பட்ட

போத்தலை  எடுத்து வெளிநாட்டு மதுபானம்  என நினைத்து அதிலிருத்த திரவத்தை  அருந்தி உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மீனவர்கள் மற்றுமொரு மீன்பிடி கப்பல் மூலம் கரைக்கு அழைத்து வரப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஆபத்தான நிலையில் உள்ள மீனவர்களை விரைவில் கரைக்கு கொண்டு வருமாறு கோரி, தங்காலை பள்ளிக்குடவ பிரதேசத்திலிருந்து மாத்தறை கதிர்காமம் வீதியை வரை இன்று பிற்பகல் பிரதேசவாசிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்களை கடற்படையினர் கரைக்கு கொண்டு வருவார்கள் என பொலிஸார் கூறியதையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.

இது இவ்வாறிருக்க, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதற்காக  கடற்படையினரின் கப்பல் ஒன்று  தயார் நிலையில் இருந்தது.

தேவைப்படுமிடத்து விரைவாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள விமானப்படையும தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி