1200 x 80 DMirror

 
 

எஸ்.ஆர்.லெம்பேட

மன்னார்- முருங்கன் பொலிஸ்
பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில்  பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர்  சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.
 
இந்த விபத்து  நேற்று (24) மாலை 5. மணியளவில்  இடம்பெற்றுள்ளது.
 
மன்னாரில் இருந்து சென்ற தென் பகுதியை சேர்ந்த தனியார் பஸ்ஸும் வவுனியா பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் முருங்கன்- கற்கிடந்தகுளம் ரயில்வே கடவைப் பகுதியில்  மோதி விபத்துக்குள்ளானது.
 
IMG 20240625 092857 800 x 533 pixel
 
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்
 
மரணமடைந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் நாக செட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தீபன் (35) என்பவரார்
 
சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி