கொட்டாவை, மகும்புர அதிவேக நெடுஞ்சாலையின்

மாற்றுப் பாதை  பஸ்  நிலையத்தில் தனியார் பஸ் ஒன்று  விபத்தை ஏற்படுத்திய சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் ஐவர்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதுக்கவிலிருந்து  புறக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பஸ், குறித்த பஸ்  நிலையத்துக்குள்  நுழைய முற்பட்டபோது, ​​பஸ்ஸின்  பிரேக் செயலிழந்ததால், சாரதியால்  பஸ்ஸகை் கட்டுப்படுத்த முடியாமல் அங்கு நின்றிருந்த  மற்றுமொரு  பஸ்ஸில் மோதியுள்ளது.
இதன் காரணமாக விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸில் பயணித்த ஐந்து பயணிகள் காயமடைந்து 1990 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் பஸ் நிலையம் பலத்த சேதமடைந்துள்ளதுடன்  பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி