கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு

அருகில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு சாரதி, நடத்துனர் மற்றும்  பயணிகள் உணவருந்தச் சென்றபோது, அங்கு மதுபோதையில் காணப்பட்ட ​​ வெளிநபர் ஒருவர்  பஸ்ஸ இயக்கி இப்பன்கட்டுவ மயானத்துக்கு  அருகில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

இப்பன்கட்டுவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்  ஹோட்டல் அருகே சாரதி மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது

போதையில் காணப்பட்டதாகக் கூறப்படும் இந்த நபர்,   ஹோட்டலை விட்டு வெளியேறி, நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸை இயக்கி அதில் காணப்பட்ட சில பயணிகளுடன்   பஸ்ஸை செலுத்திச் சென்றுள்ளார்.

இதனைக் கண்ட பஸ்ஸின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் முச்சக்கர வண்டியில் ஏறி பலவந்தமாக எடுத்துச் சென்ற பஸ்ஸை துரத்திச் சென்றபோது  இப்பன்கட்டுவ மயானத்துக்கு  அருகில் பஸ்ஸ நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பஸ்ஸை அவர்   நான்கு கிலோ மீட்டருக்கு செலுத்திச் சென்றுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி