எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்

பிரேமதாச இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உத்தேச விவாதத்துக்கான திகதியை வழங்காவிடின் அவர் விவாதத்தில் இருந்து ஓடியவராகவே கருதப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த விவாதத்துக்கு முன்னதாக இம்மாதம் 7, 9, 13 அல்லது 14 ஆம் திகதிகளை வழங்கியதாகவும், ஆனால் அதற்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும் எனவே இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் 20 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு திகதியையும் தெரிவு செய்ய முடியும் எனவும் திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் எந்த வேலையாக இருந்தாலும் அந்த தேதியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எனவே எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவே இறுதி அறிவித்தல் எனவும் அன்றைய தினம் அல்லது அதற்கு முன்னதாக வராவிட்டால் கட்சி முன்மொழிந்த பொருளாதாரக் குழுவுடன் விவாதம் நடத்தத் தயார் எனவும் தெரிவித்தார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி