இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம்  செய்வது சம்பந்தமாக பிரதமரினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படுள்ளது என theleader.lk யினூடாக ஏப்ரல் 03 பிரசுரித்த செய்திக்கெதிராக குற்றப்புலனாய்வுத்திணைக்கலத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொட்டுக்கட்சியின் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் சட்டத்தரணி  பிரேம்நாத் சிறி தொலவத்த இம்முறைப்பாட்டை செய்திருக்கின்றார் அதே போன்று பத்திரிகையாளர் சந்திப்பொன்றையும் அவர் நடத்தியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வது சம்பந்தமாக பிரதமரால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாக கூறுவது பொய் என்று அவர் கூறியுள்ளார்.

இறந்த உடல்களை ஜாதி இனம் மதம் பாராது சுகாதார முறைப்படி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் இறுதிக்கிரியைகள் செய்வது பற்றி தெளிவான முடிவொன்று தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி