கடந்த மாத இறுதியில் இலண்டனில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை அரசுக்கும் சர்வதேச கடன் பத்திரதாரர்களுக்கும்

இடையில் இரண்டு விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எஞ்சியுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரை யாடி கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சாதகமான முடிவுகள் எட்டப்படும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி