சஹாரான் ஹாசிமின் குடும்பத்தினர் பதுங்கியிருந்த சாய்ந்தமருது பொலிவரியன் கிராமத்தில் உள்ள வீட்டில் இடம்பெற்ற

குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனை, நாகூர் தம்பி அபூபக்கர் என்பவர் டபல் கெப் ரக வண்டியில் கடத்திச் சென்றதாக வெளியான செய்தி பொய்யென உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டு நாள் விவாதத்தின் கடைசி உரையை அவர் ஆற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் (CI), செய்யாத குற்றத்திற்காக மூன்று வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததாகவும், குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என உண்மைகள் நிரூபிக்கப்பட்டாலும், சட்ட மா அதிபர் திணைக்களம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதால், அவரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாமல், சந்தியில் இளநீர் வெட்டி பிழைப்பு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என்று அமைச்சர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.

சாய்ந்தமருது குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய கராஜின் பொறுப்பதிகாரியாக இருந்த நாகூர் தம்பி அபுபக்கர், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடைய டபள் கெப் வண்டி, பல ஆண்டுகளாக பழுதுபார்க்க அனுப்பப்பட்ட கார் என்பதும், அந்த நாட்களில் ஓடவே முடியாத நிலையில் இருந்தது என்றும் விசாரணையில் தெரியவந்தது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் பிரதம விசாரணை அதிகாரியாக கடமையாற்றி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அர்ஜுன மஹின்கந்த ஊடாக சாரா ஜஸ்மின் தப்பிச் சென்றதை நிரூபிப்பதற்காக அபூபக்கர் என்ற இந்த அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

02 மே 2019 மற்றும் ஜூன் 07, 2019 ஆகிய திகதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் உயிரி மாதிரிகளில் நடத்தப்பட்ட டிஎன்ஏ சாதனையில், சாரா ஜஸ்மின் இறந்துவிட்டார் என்பதை நிரூபிக்கத் தவறியதை அடுத்தே அவர் கைதானார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான முதல் இரண்டு டிஎன்ஏ பரிசோதனைகளும் மிகவும் பலவீனமான மட்டத்தில் நடத்தப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

நாகூர் தம்பி அபூபக்கர், 18 ஜனவரி 1988 அன்று இலங்கை காவல்துறையில் துணைப் பரிசோதகராகப் பணியில் சேர்ந்தார். பயிற்சியின் பின்னர் திருகோணமலை, உப்புவெளி, யாழ்ப்பாணம் முதலான பகுதிகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது 59 வயதான அவர் இளநீர் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி