குடும்பத் தகராறில் கத்தியால் குத்தப்பட்ட தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



குறித்த சம்பவம் கட்டுபொத, தெபரே வாவி பகுதியில் பதிவாகியுள்ளது.

இதனிடையே கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரும் காயங்களுடன் வைத்தியசாலைக்கு வந்ததால் இரு தரப்பினருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கட்டுபொத மதுபானசாலைக்கு முன்பாக இந்த கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுபொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி