கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் இரண்டு

மாதங்களில் கலால் திணைக்களத்தின் வருமானம் 12.2% குறைந்துள்ளது.

கலால் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி,

2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் கலால் வருமானம் 28.6 பில்லியன் ரூபாவாகும். இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் அந்த வருமானம் 25.1 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் மதுபானத்திற்கு விதிக்கப்பட்ட வரி 20% அதிகரிக்கப்பட்டதாலும், மதுபானத்தின் விலை உயர்வு காரணமாகவும் இதன் நுகர்வு குறைந்துள்ளது.

இதன் காரணமாக, சட்டப்பூர்வ மது விற்பனை குறைந்துள்ளதால், கலால் வரி வருவாய் குறைந்துள்ளதாக திணைக்களம் கூறுகிறது.

இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி இலங்கையில் சட்டவிரோத மதுபானம் 300% அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மதுவரித் திணைக்களம் மற்றும் மதுபான உற்பத்தியாளர்கள், மதுபான வரியை இரண்டாயிரம் ரூபாவால் குறைக்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.(TrueCeylon)


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி