"இலங்கையில் பிறந்த எந்தக் குடிமகனும் - தாய்நாட்டை நேசிக்கும் எந்தப் பிரஜையும் - தேசிய சுதந்திர தினத்தை

கரிநாள் என்றோ - கறுப்பு நாள் என்றோ சொல்லமாட்டார்கள். அப்படியானவர்கள் தேசிய சுதந்திர தின நிகழ்வை வைத்து அரசியல் நடத்தவும் மாட்டார்கள்" என்று, இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர நாளை வடக்கு =கிழக்கில் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி பேரணிக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"இந்த நாட்டில் எதிர்த் தரப்பினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி சிலர் தேசிய சுதந்திர தினத்தை கறுப்பு நாள் என்று சொல்வது - கரிநாள் என்று கூறுவது துரதிர்ஷ்டவசமே. அவ்வாறானவர்களின் விமர்சனங்களை ஒரு பக்கத்தில் தூக்கி வைத்துவிட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க - நாட்டை நேசிக்கும் அனைத்து உறவுகளும் ஒன்றாகச் சங்கமிக்க வேண்டும்" - என்று ரணில் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி