தியாகி திலீபன் அவர்கள் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்காக அமைதி வழியில் போராடி உயிர் தியாகம் செய்தவர்.


திலீபன் என அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப்.கேணல் இராசையா பார்த்திபனின் நினைவேந்தல் வாரம் வடக்கில் ஆரம்பமாகியுள்ளது.

2010ஆம் ஆண்டு நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் உயிரிழந்த திலீபனை நினைவுகூரும் வகையில் அரச பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளப்பட்ட திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக அவரது 35ஆவது நினைவு தினம் செப்டெம்பர் 15ஆம் திகதி வியாழக்கிழமை சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு 35 வருடங்களுக்கு முன்னர் திலீபனின் நீரும் அருந்தா உண்ணா நோன்பு ஆரம்பமானதை நினைவுகூர்ந்து "மகாவீர பண்டிதர்" அன்னை அவர்களால் காலை 9.45 மணியளவில் தீபமேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

லெப்.கேணல் இராசையா பார்த்திபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இடத்தில் "மகாவீர தமிழ் ஈழவன்" தாயார் தீபமேற்றி வைத்ததாக மாகாண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

35 வருடங்களுக்கு முன்னர், திலீபன் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர், அது இன்று தென்னிலங்கையில் செயற்பாட்டாளர்களை குறிவைத்து பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் மாகாணங்களில் இருந்து சிங்கள இராணுவத் தளங்களைத் திரும்பப் பெறுதல், தமிழ் மாகாணங்களில் தற்காலிகத் தமிழ் அரசாங்கம் அமையும் வரை புனர்வாழ்வுப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துதல், தமிழ் மாகாணங்களுக்குச் சொந்தமான கிராமங்களில் சிங்களவர்களைக் குடியமர்த்துவதை நிறுத்துதல், தமிழ் மாகாணங்களில் சிங்களப் பொலிஸ் நிலையங்கள் அமைப்பதை நிறுத்துதல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக்கைகளை பாரத தேசத்திடம் முன்வைத்து 1987 செப்டம்பர் 15 அன்று, திலீபன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

திலீபனின் உண்ணா நோன்பு அஹிம்சை தேசத்து ஆட்சியாளர்களின் காதில் விழாததால், பன்னிரண்டாம் நாள் (26.9.1987) மண்ணை விட்டுப் பிரிந்தார் திலீபன்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று காலை 9.45 மணியளவில் பல்கலைக்கழக மைதானத்தில் தியாகி திலீபனை நினைவு கூருவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி