பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து தவறான முடிவுகளுக்கும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷி சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாட்டு மக்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்திய அனைத்து தவறான பொருளாதார முடிவுகளுக்கும் நாடாளுமன்றமே பொறுப்பேற்க வேண்டும். மத்திய வங்கியின் பிழையான அணுகுமுறை மற்றும் நிதியமைச்சினால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தன. அந்த முடிவுகளை எடுத்த அதிகாரிகள் மீது பாராளுமன்றத்தில் யாரும் குற்றம் சாட்ட முடியாது. அந்த முடிவுகளை எடுக்கும் முதன்மை பொறுப்பு பாராளுமன்றத்திற்கு இருக்கிறது அல்லவா? அதன் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று நிதி நிர்வாகம். அரசியலமைப்பின் 148 வது பிரிவின்படி. பொது நிதிகள் மீதான முழு கட்டுப்பாட்டையும் பாராளுமன்றம் கொண்டுள்ளது. அதன்படி. நிதி ஒப்புதலுக்காக ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.

"ஏப்ரல் 12 ஆம் திகதி கடனை மீள செலுத்த முடியாது என்ற ஒரு தீவிரமான முடிவு."

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது. ​​2022ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய கடனாக 6.1 பில்லியன் டொலர்கள் இருக்கும் என்பதை நாடாளுமன்றம் நன்கு உணர்ந்துள்ளது.

ஏப்ரல் 12 அன்றுஇ நாடு கடனை மீள செலுத்த முடியாத நாடு என்று அறிவிக்கப்பட்டது. இது ஒரு தீவிரமான முடிவு. அதைச் செய்தால் என்ன நடக்கும். செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பது நாட்டின் சாமானிய மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு இது பொதுவான முடிவு என்றாலும். நாட்டின் சாமானிய மக்களுக்கு வாழ்வோ சாவோ என்ற இடத்திற்குத் தள்ளிவிடும் முடிவு இது.

இந்த முடிவு தவறானது என்று நாடாளுமன்ற உறுப்பினர்களே கூறுகிறார்கள். அப்படியானால் அவர்கள் ஏன் தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை?

நிதி அமைச்சும் மத்திய வங்கியும் வெவ்வேறு நபர்களை அடிக்கடி குற்றம் சாட்டுகின்றன. பெட்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். குடிநீர் வளங்கள் அமைச்சு நட்டம் என்று கூறுகின்றனர். அதன் பிறகு எயார் லங்கா விமான சேவை பல கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.

நீண்ட நாட்களாக எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானதா? நிதி நிர்வாகத்தின் சமீபத்திய கோட்பாடுகளை சந்திக்கும் அளவிற்கு போதுமான கோட்பாட்டு அறிவு நம்மிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

நிதி அமைச்சகம் மற்ற நிறுவனங்களுக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்று போதிக்கின்றது. ஆனால் கடனை மீள செலுத்த முடியாத தோல்வியடைந்த நாடாக மாறும் வரை நிதி அமைச்சும் மத்திய வங்கியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது ஏன். இதில் முழுமையான மாற்றம் தேவை.

நிதி அமைச்சின் செயலாளரின் தற்போதைய சம்பளம் சுமார் 15 இலட்சம். கொடுப்பனவுகளுடன் 25 லட்சம் வரை பெறுகின்றனர். மத்திய வங்கியின் ஆளுனர் சுமார் 25 இலட்சம் சம்பளம் பெறுகிறார். அவர் தனது ஓய்வூதியத்தையும் பெறுவார். சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 10 லட்சம் பெறுகிறார். அப்படிப் பார்த்தால். நிறுவனங்களுக்கிடையில் இப்படிப்பட்ட இடத்தில் பணியாற்றிய ஒருவர். அப்படிப்பட்ட இடத்தில் பதவி வகிக்கும் போதுஇ ​​அது நாட்டைப் பல்வேறு விதங்களில் பாதிக்கலாம்.

உதாரணமாகஇ சர்வதேச சமூகத்துடன் எழும் சில பொருளாதார நிலைமைகள் இலங்கையை பாதிக்கிறது மற்றும் இறுதியில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்குக் காரணம் வெளியுறவுக் கொள்கை சரியாகக் கையாளப்படவில்லை. இப்போது சீனா இலங்கையில் அதிக முதலீடு செய்ததால் இந்த சீன கடன்களை சீனா செலுத்தவில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். இது வெளிநாட்டு ஒப்பந்தம் என்று சிலர் கூறுகின்றனர். அது உண்மையா பொய்யா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த நிலையில்தான் கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்தது.

இது போன்ற நேரத்தில்இ முக்கிய பொறுப்பில் உள்ள பாராளுமன்றம் தூக்கத்தில் உள்ளதா?

மக்கள் பிரதிநிதிகளுக்கு அதுபற்றி எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்கிறார்கள். இதுகுறித்து பேசவில்லை. பொறுப்புகள் நிறைவேற்றப்படவில்லை. பாராளுமன்றத்தில் உள்ள பலருக்கு இப்படி ஒரு பொறுப்பு இருப்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

நாங்கள் பொறிமுறை மாற்றம் (சிஸ்டம் சேர்ஞ்) பற்றி பேசுகிறோம். முழுமையான இந்த மாற்றம் வரவேண்டும். இந்தக் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

உலகில் வளர்ந்த நாடுகள் தனிநபர்களால் ஆளப்படுவதில்லை. வழிமுறை மூலம். சிஸ்டம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. சிஸ்டம் அப்ளை அவசியம். நமது நாடு தனி நபர்களால் ஆளப்படுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் முடிவெடுப்பதை நிறுத்த வேண்டும்.

குறிப்பாக இந்த நேரத்தில், மத்திய வங்கியின் முடிவெடுக்கும் முறை சரியானதா. அது அரசியலமைப்புக்கு உட்பட்டதா, சரியான அறிவு உள்ளதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இதற்கான சிறந்தவொரு பொறிமுறையை அறிமுகம் செய்ய வேண்டும். என்று தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி