அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவிற்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் முன்னர் ஒரு முக்கிய உள்ளூர் செய்தித்தாளின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக பணியாற்றினார், அதே நேரத்தில் அவர் ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராகவும் பணியாற்றினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி