நிர்மாணத்துறைக்கு தேவையான பல பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால், அத்துறை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.

நிர்மாணத் தொழிலுக்கு அத்தியாவசியமான அலுமினிய மழைநீர் குழாய்கள், நீர் குழாய்கள், ஓடுகள் போன்ற பல பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வர்த்தகர் ஒருவரின் தலையீட்டில் தடை செய்து டைல்ஸ் இறக்குமதி தடைசெய்யப்பட்டு, உள்நாட்டில் விலையை அதிகரித்து, டைல்ஸ் பற்றாக்குறையை உருவாக்கி டைல்ஸ் மாபியா நடத்தப்படுவதாகவும் லியனாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி