பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை  நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று  இடம்பெற்ற தீர்ப்பின் மூலமே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  மார்ச் மாதம் 2021ஆம் ஆண்டில் முதலாளிகள் சம்மேளனம் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவே, இன்று  தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதோடு 22 கம்பனிகளுமம் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி