பருப்பு, சீனி, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, 600 ரூபாவாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாவாகவும், 330 ரூபாவாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாவாகவும், 215 ரூபாவாக இருந்த உருளைக்கிழங்கு மொத்த விலை 150 ரூபாவாகவும், மிளகாய் விலை 1900 ரூபாவிலிருந்து 1300 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொலரின் விலை ஸ்திரப்படுத்தப்பட்டதாலும் வங்கிகள் டொலரை வழங்குவதாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி