1200 x 80 DMirror

 
 

1000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்த அரிசி 44 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்டு இலங்கை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கம் 7,900 பாடசாலைகளில் உள்ள 1.1 மில்லியன் மாணவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு அரிசியை வழங்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த வாரம் மேலும் இரண்டு அரிசி இருப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி